/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் போக்குவரத்து விதி மீறல் வாகனங்களுக்கு அபராதம்
/
கடலுாரில் போக்குவரத்து விதி மீறல் வாகனங்களுக்கு அபராதம்
கடலுாரில் போக்குவரத்து விதி மீறல் வாகனங்களுக்கு அபராதம்
கடலுாரில் போக்குவரத்து விதி மீறல் வாகனங்களுக்கு அபராதம்
ADDED : அக் 05, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் போக்குவரத்து விதியை மீறிய 150 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றது, குடித்து விட்டு வாகனங்களை இயக்கியது, ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.