/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலுவை வழக்குகள்: எஸ்.பி., அறிவுரை
/
நிலுவை வழக்குகள்: எஸ்.பி., அறிவுரை
ADDED : பிப் 19, 2026 05:00 AM

கடலுார்: கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றார். இந்த கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் மெச்ச தகுந்த பணிபுரிந்த டி.எஸ்.பி.,தமிழ்இனியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கர், பாரதி, சிவானந்தன், விஜயகுமார், கவிதா மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், போலீசார் உட்பட 71 பேருக்கு எஸ்.பி.,ஜெயக்குமார், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

