/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
/
துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
ADDED : அக் 21, 2024 06:33 AM

கடலுார்: கடலுார் துறைமுகத்தில் நேற்று மீன்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
கடலுார் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி,
தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு பிடித்து வரும் மீன்களை கடலுார் துறைமுகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
வஞ்சரம் கிலோ 600 முதல் 800 ரூபாய் வரையும், வவ்வா 300, தேங்காய் பாறை 450, கனவா 250, கொடுவா 300, நெத்திலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்வாங்க அதிகளவு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்ததால் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

