/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்
/
சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்
ADDED : பிப் 23, 2026 04:04 AM

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி பொதுமக்கள், சிறுவர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை மெரீனா பீச்சிற்கு அடுத்தபடியாக நீளமான பீச்சாக கடலுார் சில்வர் பீச் உள்ளது.
வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவர்.
மேலும் தற்போது நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் சிறுவர்களுக்காக நெய்தல் பூங்காவும் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுாரில் சிறந்த பொழுதுபோக்கு மையமாக சில்வர் பீச் திகழ்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் கடலுார் அதைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கூடி விளையாடி மகிழ்ந்தனர்.

