ADDED : ஜன 06, 2026 03:33 AM
பண்ருட்டி: பண்ருட்டி ராஜாஜி சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் புழுதி பறந்து மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி ராஜாஜி சாலையில் (கடலுார் - சித்துார் சாலை) நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு நல்ல நிலையில் இருந்த தார் சாலை கடந்த வாரம் முக்கால் அடி பள்ளத்திற்கு பெயர்த்து எடுத்தனர். சாலை பெயர்த்து எடுத்து ஒரு வாரமாக தார் சாலை அமைக்கவில்லை.
இதனால் மண், தார் துகள்கள் புழுதியாக கடைவீதியில் பறக்கிறது. லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி உருவாகி, பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக நிலை குளைந்து விடுகின்றனர். அச்சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார் சாலை பணியை துவக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

