sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளமங்கலம் காலனியில் குடிநீரின்றி மக்கள் அவதி

/

இளமங்கலம் காலனியில் குடிநீரின்றி மக்கள் அவதி

இளமங்கலம் காலனியில் குடிநீரின்றி மக்கள் அவதி

இளமங்கலம் காலனியில் குடிநீரின்றி மக்கள் அவதி


ADDED : மார் 20, 2024 02:09 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : க.இளமங்கலம் காலனி பகுதியில் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள காலனி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் காலை, மாலை வேளைகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் மின் மோட்டார் செயலிழந்து, குடிநீர் சப்ளை பாதித்தது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே போட்டி காரணமாக பழுதான மின் மோட்டாரை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் வயல்வெளிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலம் தொடர்கிறது.

வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தடையின்றி குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us