ADDED : செப் 15, 2025 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: புளியங்குடி கிராம மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்வதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டுமென மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில், சிதம்பரம் அடுத்த புளியங்குடி கிராம மக்கள் அளித்த மனு:
புளியங்குடி பகுதியில் பல ஆண்டுளாக வசிக்கிறோம். கடந்த 1989ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கியது. இந்நிலையில், தனிநபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது மாவட்ட நிர்வாகம், வீடுகளை காலி செய்யுமாறு கூறுகிறது. இந்த முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.