/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
6 ஏக்கர் குளத்தை காணோம் மேப்புடன் தாசில்தாரிடம் மனு
/
6 ஏக்கர் குளத்தை காணோம் மேப்புடன் தாசில்தாரிடம் மனு
6 ஏக்கர் குளத்தை காணோம் மேப்புடன் தாசில்தாரிடம் மனு
6 ஏக்கர் குளத்தை காணோம் மேப்புடன் தாசில்தாரிடம் மனு
ADDED : அக் 19, 2024 04:37 AM

விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே 6 ஏக்கர் குளத்தை காணவில்லை என வரைபடத்துடன் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் தெற்கு ஒன்றிய வி.சி., அமைப்பாளர் விஜயகுமார் தலைமையில் மண்டல துணை தாசில்தார் செல்வமணியிடம் கொடுத்துள்ள மனு:
விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராம சாலையோரம் புல எண். 43ல் 6 ஏக்கர் பரப்பளவில் குடையான்குளம் இருந்தது.
இதனை பொது மக்கள், கால்நடைகள் பயன்படுத்தி வந்தன. மேலும் விவசாய பயன்பாட்டிற்கும் இதிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. நாளடைவில் குளத்தின் கரைகள், நீர்வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் 6 ஏக்கர் குளம் காணாமல் போய்விட்டது. எனவே, மாயமான குளத்தை மீட்டு, அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ்., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன், ராஜேந்திரபட்டிணம் ஊராட்சித் தலைவர் சடையன்பெயரன் உடனிருந்தனர்.

