ADDED : அக் 28, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பினாயில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 53; பினாயில் வியாபாரி. இவர் கடந்த 25ம் தேதி, தனது பைக்கில் சென்று பினாயில் விற்பனை செய்துவிட்டு, இரவு 7:30 மணியளவில் விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, விஜமாநகரம் பஸ் நிறுத்தம் அருகே தனது பைக்கை நிறுத்தி விட்டு, எதிரே இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.