ADDED : பிப் 26, 2024 11:25 PM

கடலுார் : கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்நடந்தது.
கல்லுாரி துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ்முகாமை துவக்கி வைத்தார். முகாமில், இந்தாண்டு பயிற்சி முடிக்கும் அனைத்துபிரிவு மூன்றாமாண்டு மாணவர்கள், கடலுார் மகாலட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள்,மயிலாடுதுறை ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், ஏழுமலையான்ஐ.டி.ஐ., மாணவர்கள் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல முன்னணி நிறுவனங்களி்ன் அதிகாரிகள் பங்கேற்று, தகுதியான நபர்களை தேர்வுசெய்து, பணி நியமன ஆணை வழங்கினர். நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சின்ராஜ்,மேலாளர் விஜயக்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி பங்கேற்றனர்.
ஸ்ரீமகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., பயிற்சி முடிக்கும்அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி என, இக்கல்வி நிறுவனங்களின்தலைவர் ரவி கூறினார்.
