ADDED : ஜூலை 26, 2011 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு விழா, இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இந்தியன் வங்கி மேலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பஞ்சநாதன், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அருள் வரவேற்றார். நெய்வேலி புனித ஆந்தோணியார் மெட்ரிக் உயர்நிலை பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் சீருடை வழங்கினார். அரிமா சங்கத் தலைவர் சிவா, அந்தோணிசாமி மரக்கன்று நட்டனர். ஆசிரியர்கள் அந்தோனா, நிர்மலாமேரி, ஜூலியட் சகாயராணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.