/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு மாவட்டத்தில் துவக்கம்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு மாவட்டத்தில் துவக்கம்
ADDED : பிப் 10, 2026 04:10 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு துவங்கியது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 30,550 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 196 மையங்களில் நேற்று செய்முறை தேர்வு துவங்கியது.
பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். செய்முறை தேர்வு வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.

