ADDED : ஜூலை 21, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பில் பா.ம.க., 37வது ஆண்டு துவக்க விழா நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாநில உழவர் பேரியக்க துணை தலைவர் சங்கர நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் மணியரசன், வடிவேல், மோகன், நிர்வாகிகள் சிலம்பரசன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் நாக ஜெய்சங்கர் வரவேற்றார். கடைவீதியில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.