ADDED : ஜூன் 14, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி நேற்று குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.