/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ
ADDED : நவ 10, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த தொளார் புதுகாலனியைச் சேர்ந்தவர் ரகுபதி,29; அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த தகவலின் பேரில் ரகுபதி மற்றும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ரகுபதியின் பெற்றோர் மகாதேவி, செல்வராசு, சிறுமியின் பெற்றோர் சுந்தரமூர்த்தி, பழனியம்மாள் ஆகியோர் மீது, திட்டக்குடி மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.