ADDED : ஜூலை 18, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த தென்னம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பாஸ்கரன், 19. கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். இவர் 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்தார். கடந்த 13ம் தேதி, சிறுமிக்கு, பாஸ்கரன் அங்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
புகாரின் பேரில் பாஸ்கரன் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.