ADDED : ஜூலை 22, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஒரங்கூரைச் சேர்ந்தவர் வீரமுத்து, 32; இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தினார். இதில், சிறுமி கர்ப்ப மானார். சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் பரி சோதனைக்கு சென்ற போது, சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என மருத்துவமனை நிர்வாகம், திட்டக்குடி மகளிர் போலீசில் புகார் தெரிவித்தது.
உடன், வீரமுத்து மீது குழந்தை திருமண தடை சட்டம், 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிகின்றனர்.