ADDED : ஆக 12, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: திருச்சியை சேர்ந்த வாலிபர் வடலுாரில் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
வடலுாரில் தனியார் மருத்துவமனை அருகில் கடந்த 6ம் தேதி வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், திருச்சி, துறையூரைச் சேர்ந்த முகுந்தன் எனத் தெரிந்தது. இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.