ADDED : டிச 22, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் இரு குழந்தைகளின் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கீழ்புவனகிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு. சிங்கப்பூரில் கடந்த இரண்டாண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, 32; திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.10 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர்.இந்நிலையில் நேற்ற காலை வீட்டு படுக்கை அறையில் புவனேஸ்வரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி டைவத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பெண் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.