/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுருக்கு கம்பியில் புலி பலி மூவரிடம் போலீஸ் விசாரணை
/
சுருக்கு கம்பியில் புலி பலி மூவரிடம் போலீஸ் விசாரணை
சுருக்கு கம்பியில் புலி பலி மூவரிடம் போலீஸ் விசாரணை
சுருக்கு கம்பியில் புலி பலி மூவரிடம் போலீஸ் விசாரணை
ADDED : நவ 28, 2024 02:51 AM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் இரண்டாவது மைல் அருகே, செலுக்காடி தனியார் எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் புலி இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர், வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், சுருக்கு கம்பி கழுத்தில் சிக்கி புலி உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. தொடர்ந்து, மோப்ப நாய்கள், அழைத்து வரப்பட்டு, அதன் உதவியுடன் அப்பகுதியில் வன ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின் புலியின் உடல் எரிக்கப்பட்டது. புலிக்கு சுருக்கு வைத்து கொன்றது தொடர்பாக, வனத்துறையினர் மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.