/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் 4 சவரன் அபேஸ் : போலீஸ் விசாரணை
/
பெண்ணிடம் 4 சவரன் அபேஸ் : போலீஸ் விசாரணை
ADDED : நவ 06, 2025 05:21 AM
வடலுார்: பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வடலுார் அடுத்த வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன், 35; கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி, 30; இவர் நேற்று முன்தினம் தனது தாய் வள்ளி, 60, என்பவருடன் வடக்குத்து இந்தியன் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க ஸ்கூட்டரில் சென்றார்.
நகையை பெற்ற ராஜலட்சுமி தனது வாகனத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் நகை பையை வைத்து, தாயாரை அழைத்து கொண்டு வீடு செல்லும் வழியில் மளிகை கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினார்.
இருவரும் கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த, 4 சவரன் நெக்லஸ் மாயமானது தெரியவந்தது.
சம்பவம் குறித்து ராஜலட்சுமி வடலுார் போலீசில் புகார் அளித்தார்.
திருட்டு குறித்து வழக்குப்பதிந்த போலீசார், நகையை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து பறித்தனரா என, சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரித்து வருகின்றனர்.

