நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம், ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவணன், 47; முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரியலுார் மாவட்ட ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்தார். இவரது மனைவி அம்பிகா. இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக சரவணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் சாவடிக்குப்பம் மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

