sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

/

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 13, 2024 05:53 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்ஒரு கட்டமாக, நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 26 ல் செயல்பட்டு வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது,

என்.எல்.சி.,கல்வி துறையின் செயலாளரும், நெய்வேலி நகரின் தேர்தல் ஆணைய ( பொறுப்பு) அலுவலருமான, பிரபாகரன் தலைமை தாங்கினார். நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளின் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜலிங்கம் அனைத்து பாகங்களுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கினார். அவர் பேசுகையில், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் விடுபட்டிருந்தால், உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், தேர்தல் நேரத்தில் ஓட்டுச்சாவடி நிலையை அலுவலர்கள் விழிப்புணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றார். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us