/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் விழா
/
மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் விழா
ADDED : ஜன 18, 2024 04:36 AM

நடுவீரப்பட்டு: நடுவீரபபட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையத்தில், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, காணும் பொங்கலையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு உற்சவர் விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று, 18ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.