ADDED : ஜன 09, 2026 06:53 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நேற்று ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
துணை சேர்மன் முகமது யூனுஸ், நகர செயலாளர் முனவர் உசேன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி செயலாளர் சக்கரபாணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், தொழில் நுட்ப அமைப்பாளர் இஸ்மாயில், கவுன்சிலர்கள் கணேசமூர்த்தி, சரவணன், மாரியப்பன், பசிரியாமா ஜாபர் அலி, அஜீஸ் அகமது, முன்னாள் துணை சேர்மன் நடராஜன், முன்னாள் நகர துணை செயலாளர் சரவணன், நிர்வாகிகள் கோமு, புருஷோத்தமன், சிவபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

