/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
ADDED : ஜன 06, 2026 03:58 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநி யோகம் செய்யும் பணியில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகளுக்கு எளிதாக கிடைக்க தமிழக அரசு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று துவங்கியது. கடலுார் மாவட்டத்தில் 1,458 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 7 லட்சத்து 78 ஆயிரத்து 296 ரேஷன் கார்டுகள் உள்ளன.
மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டோக்கனில் பரிசு தொகுப்பு பெறும் தேதி, நேரம் குறிப்பிடப்பட் டுள்ளது.

