ADDED : ஜன 10, 2026 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி, குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கின.
ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.
முன்னதாக அளிக்கப்பட்ட டோக்கன்கள் அடிப்படையில் அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் தொகுப்பு மற்றும், ரூ.,3 ஆயிரம் ரூபாயை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். விற்பனையாளர் மனோகரன் ஊராட்சி, முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

