ADDED : ஜன 10, 2026 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகராட்சி ரேஷன் கடைகள் மூலம் மேயர் சுந்தரி ராஜா பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 3 ஆயிரம் ரொக்கம், மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடலுார் மாநகரில் மேயர் சுந்தரி ராஜா, ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலானி, கவுன்சிலர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

