sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தரமில்லாத சாலை பணி அரசு நிதி வீணாகும் அவலம்

/

தரமில்லாத சாலை பணி அரசு நிதி வீணாகும் அவலம்

தரமில்லாத சாலை பணி அரசு நிதி வீணாகும் அவலம்

தரமில்லாத சாலை பணி அரசு நிதி வீணாகும் அவலம்


ADDED : ஜூலை 21, 2025 06:43 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமில்லாமல் இருப்பதால் அரசின் நிதி வீணாகிறது.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வான்பாக்கம், விஸ்வநாதபுரம், முள்ளிகிராம்பட்டு கிராமங்கள் நகர பகுதியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது வான்பாக்கத்தில் இருந்து விஸ்வநாதபுரம் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு, பல இடங்களில் பழைய சாலை அப்படியே தெரியும் அளவுக்கு தரமில்லாமல் பணி நடக்கிறது.

நகராட்சியில் இன்ஜினியர் பணியிடம் காலியாக இருப்பதால் சாலை பணிகளை முறையாக கண்காணிக்க அதிகாரிகள் இல்லை. இதனால், சாலை வீணாவதுடன் அரசின் நிதி வீணாகிறது. எனவே, சாலைப் பணியை தரமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us