sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குண்டும் குழியுமான சாலை 10 கிராம விவசாயிகள் அவதி

/

குண்டும் குழியுமான சாலை 10 கிராம விவசாயிகள் அவதி

குண்டும் குழியுமான சாலை 10 கிராம விவசாயிகள் அவதி

குண்டும் குழியுமான சாலை 10 கிராம விவசாயிகள் அவதி


ADDED : நவ 09, 2024 04:37 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மானம்பாத்தான் வாய்க்கால் கரையின் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளதால், 10 கிராம விவசாயிகள் அவதியடைகின்றனர்.

புவனகிரியில் இருந்து வேளங்கிப்பட்டு கிராமம் வரை மானம்பாத்தான் வாய்க்கால் கரை சாலை செல்கிறது. இதில், தச்சக்காடு கிராமத்தில் இருந்து சேந்திரக்கிள்ளை வரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை, தச்சக்காடு, வல்லம், சேந்திரக்கிள்ளை கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான இடு பொருட்கள் எடுத்துச்செல்லவும், அறுவடை நேரங்களில் நெல் மூட்டைகளை டிராக்டர் மூலம் கொண்டு வரவும் பயன்படுத்தி வந்தனர்.

மேலும், சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர் கிராமங்களை சேர்ந்தவர்கள், புவனகிரிக்கு குறுக்கு வழியாக செல்லவும், கீழமணக்குடி, ஆயிபுரம், குறியாமங்கள் கிராமங்களை சேர்ந்தவர்கள் பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு கிராமங்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

எனவே, மானம்பாத்தான் வாய்க்கால் கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us