/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு
/
குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு
ADDED : பிப் 06, 2026 06:36 AM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் முன்பு குண்டு குழியுமான சாலை என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
நெய்வேலி மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் முன்பு ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலை மாறி மழை நீர் தேங்கி வாகன ஒட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு காயமடைந்தனர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த டிசம்பரில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலி காரணமாக என்.எல்.சி., நகர நிர்வாகம் சார்பில் குண்டும் குழியுமான சாலையில் ஜல்லிகள் கொட்டி சீரமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் நுழைவு வாயில் முன்பு உள்ளசாலை சீரமைக்கப்பட்டது. தற்போது பஸ்கள், நிலையத்தில் இருந்து வெளியே வரும் வழிச்சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

