ADDED : நவ 14, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் இன்று அறிவிக்கப்பட்ட மின்தடை, ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலுார் செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என, மின்வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடக்கிறது.
இதன் காரணமாக இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது என, செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

