நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்டவற்றுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.