
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது.
இதனையொட்டி பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தன.
மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

