ADDED : ஜன 28, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி :   திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு  சிறப்பு அபிஷேகம்; தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

