நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபி ேஷகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, மாலை 5:30 மணியளவில் நந்திபகவானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது.
மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ வழிபாடு நடந்தது.