/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சி
/
அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சி
ADDED : நவ 28, 2024 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, விருத்தாசலம் நீதிமன்ற வளாகம் முன், வழக்கறிஞர்கள் சார்பில், அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் கலையரசி, அப்துல்லா, கருணாநிதி, ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வழக்கறிஞர்கள் பழனிமுத்து, ராமு, சுரேஷ், ஜெயராஜ், செல்வகுமார், மோகன், செந்தில், விஷ்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.