/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 31, 2025 03:39 AM

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவி களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில் நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும், புதுச்சேரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான வெற்றிவேல், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மருதவாணன், சேலம் மல்லிகாராம் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஜெய்சங்கர் ஆகியோர் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மல்லிகாராம் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஜெய்சங்கர், மாணவர் களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கினார்.
தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், நடராஜன், சண்முகவேல் உடனிருந்தனர்.