ADDED : செப் 05, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சக்தி கரகம் சுமந்த பூசாரி, பக்தர்கள் மீது நடந்து செல்லும் வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் அடுத்த பரவளூர் ராயப்பர் சுவாமி கோவிலில், ஆவணி மாத திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடும், இரவு வீதியுலாவும் நடந்தது.
முக்கிய விழாவாக நேற்று முன்தினம் மாலை, மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
கோவிலை இரண்டு சுற்றுகள் சுற்றியதும், மூன்றாவது சுற்றுக்கு பக்தர்கள் தரையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்கள் மீது கரகம் சுமந்த பூசாரி நடந்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் திருமண தடை, குழந்தைப்பேறு, வியாபாரத்தில் நஷ்டம் போன்றவை நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை.
