/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் எதிா்பார்ப்பு
/
ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் எதிா்பார்ப்பு
ADDED : மே 27, 2025 11:04 PM

விருத்தாசலம்: எருமனுாரில் பூட்டிக்கிடக்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், ராசாபாளையம், தொட்டிக்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த கிராம மக்கள் நலன் கருதி, எருமனுாரில், கடந்த ஓராண்டுக்கு முன் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது.
இதனால், தற்போது, இந்த கட்டடம் சூதாட்ட கிளப்பாக மாறியுள்ளது. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, பூட்டிக் கிடக்கும், துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

