/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் வரும் 9ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
பெண்ணாடத்தில் வரும் 9ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெண்ணாடத்தில் வரும் 9ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெண்ணாடத்தில் வரும் 9ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 06, 2025 08:04 AM
கடலுார் : பெண்ணாடத்தில் வரும் 9ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அ வரது செய்திக் குறிப்பு:
மகளிர் திட்டம் சார்பில் வேலையில்லா இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் வரும் 9ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள், தொழிற்கல்வி மற்றும் பொதுக் கல்வி படித்த அனைத்து இளைஞர்களும் பங்கேற்கலாம். தனியார் நிறுவனங்கள், தகுதியான நபர்களை தேர்வு செய்து, வேலை உறுதி ஆணை வழங்குகிறது.
கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, கீரப்பாளையம், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ் ணம், காட்டுமன்னார்கோவில், மங்களூர், நல்லுார், விருத் தாசலம் வட்டார இளைஞர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்போர், அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, வருமானச் சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுய முகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை எடுத்து வர வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு கடலுார் பூமாலை வணிக வளாகம், ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் 94440 94260, 94440 94119 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.