sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.260 கோடியில் திட்டப் பணிகள் சிதம்பரத்தில் அடிக்கல் நாட்டல்

/

ரூ.260 கோடியில் திட்டப் பணிகள் சிதம்பரத்தில் அடிக்கல் நாட்டல்

ரூ.260 கோடியில் திட்டப் பணிகள் சிதம்பரத்தில் அடிக்கல் நாட்டல்

ரூ.260 கோடியில் திட்டப் பணிகள் சிதம்பரத்தில் அடிக்கல் நாட்டல்


ADDED : மார் 05, 2024 06:26 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், ரூ.6.30 கோடியில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், ரூ. 260 கோடியில் மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் திட்டப்பணிகளுக்கு அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.

சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண்தம்புராஜ் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 438 பயனாளிகளுக்கு 3 கோடியே 34 லட்சத்து 49 ஆயிரத்து 169 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 36 ஊரக குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.

விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் கடலுார் ஐயப்பன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், கடலூர் மேயர் சுந்தரிராஜா, நகராட்சி துணை சேர்மன் முத்துக்குமார், அண்ணாமலைநகர் பேரூராட்சி சேர்மன் பழனி, முன்னாள் நகராட்சி சேர்மன் சந்திரபாண்டியன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மூத்த கவுன்சிலர் ரமேஷ், பேராசிரியர் ராமநாதன், கவுன்சிலர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், மணிகண்டன், மக்கின், ராஜன், அறிவழகன், ஜெயசித்ரா, கவிதா, அசோகன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நகராட்சி கமிஷனர் மல்லிகா நன்றி கூறினார்.

முன்னதாக, 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஞானப்பிரகாசம் குளத்தை அமைச்சர்கள் பார்வையிட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு நடைபாதைகளை திறந்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us