ADDED : ஜூன் 26, 2026 03:42 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலுார் மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் ரவீந்திரன், கண்டன உரையாற்றினார்.
பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாகவே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
