ADDED : பிப் 13, 2026 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பா.ஜ., வை கண்டித்தும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க., வை கண்டித்தும் நேற்று கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் எம்.எல்,ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, முன்னிலை வகித்தனர். சுரேஷ், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், காங்., மாவட்டத் தலைவர் ரங்கமணி, மாநில செயலாளர் சந்திரசேகரன், மாநகர தலைவர் வேலுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் பரசு முருகையன், மாவட்ட செயலாளர் கலைமோகன், கம்யூ கட்சி மாதவன், இந்திய கம்யூ துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

