ADDED : பிப் 03, 2026 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், கவுன்சிலர் தையல்நாயகி கணேசமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர், பிளஸ் 1 மாணவர்கள் 128 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். விழாவில், முன்னாள் துணை சேர்மன் செழியன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர்கள் ரொகையமா குன்முகமது, வேல்முருகன், ஜாபர் அலி, சரவணன், மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சாந்தமோகன் நன்றி கூறினார்.

