sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரண்டாவது நாளாக சில்வர் பீச்சில் பொதுமக்களுக்கு தடை

/

இரண்டாவது நாளாக சில்வர் பீச்சில் பொதுமக்களுக்கு தடை

இரண்டாவது நாளாக சில்வர் பீச்சில் பொதுமக்களுக்கு தடை

இரண்டாவது நாளாக சில்வர் பீச்சில் பொதுமக்களுக்கு தடை


ADDED : நவ 30, 2024 04:43 AM

Google News

ADDED : நவ 30, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று இரண்டாவது நாளாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடலுார் தாழங்குடா, தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்தது. ஆனால், நேற்று தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், கடல் சீற்றம் மற்றும் அலையின் வேகம் குறைந்து காணப்பட்டது.

புயல் காரணமாக நேற்று முன்தினம் சில்வர் பீச்சிற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று இரண்டாவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டதால், பீச் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பீச்சிற்கு அருகில் உள்ள பூங்கா மற்றும் காலியிடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அமர்ந்திருந்து சென்றனர்.

மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாமல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us