/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் குறைகேட்பு கூட்டம் 423 மனுக்கள் மீது விசாரணை
/
மக்கள் குறைகேட்பு கூட்டம் 423 மனுக்கள் மீது விசாரணை
மக்கள் குறைகேட்பு கூட்டம் 423 மனுக்கள் மீது விசாரணை
மக்கள் குறைகேட்பு கூட்டம் 423 மனுக்கள் மீது விசாரணை
ADDED : ஆக 05, 2025 01:51 AM
கடலுார்:கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 423 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக் கள் பெற்றுக் கொண்டார்.
மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், கலெக்டர் நேர்முக உதவியாளர் தீபா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடம் இருந்து 423 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.