sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

/

வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 05, 2024 04:02 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர் : வேப்பூர் தாலுகா அறிவித்து 10 ஆண்டுகளாகியும், கருவூலம் அமைக்காததால் அரசு ஊழியர்கள், பொது மக்கள் அவதியடைகின்றனர்.

விருத்தாசலத்தில் வேப்பூர் பிர்காவில் 32 கிராமங்களையும், திட்டக்குடியில் சிறுபாக்கம் பிர்காவில் 21 கிராமங்களையும் பிரித்து, கடந்த 2013ல் வேப்பூர் தாலுகா உருவாக்கப்பட்டது. வேப்பூர் பஸ் நிலையம் அருகிலுள்ள கட்டடத்தில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. தாலுகா அறிவித்து 10 ஆண்டுகளாகியும் வேப்பூரில் கருவூலம் அமைக்க வில்லை.

இதனால், தாலுகாவிற்குட்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியர்கள் பென்சன், வருவாய் கிராமங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, பொது மக்கள் நில அளவைக்கு பணம் செலுத்த, 25 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் கருவூலத்திற்கு செல்கின்றனர். அரசு ஊழியர்கள், பென்சனர்கள் குறிப்பிட்ட நாளில் ஊதியம் பெற முடியவில்லை.

இதனால், கால விரையம், கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், வேப்பூர் தனி தாலுகாவாக அறிவித்தும் பயனற்ற நிலையில் உள்ளதாக அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, வேப்பூர் தாலுகாவில் அரசு கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us