/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்றவர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்றவர் கைது
ADDED : பிப் 06, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : புதுச்சேரி மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சித்தேரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சித்தேரிக்குப்பம் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன், 53, தனது வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 19 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.