sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு புதுச்சேரி தொழிலாளிக்கு ஆயுள்

/

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு புதுச்சேரி தொழிலாளிக்கு ஆயுள்

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு புதுச்சேரி தொழிலாளிக்கு ஆயுள்

பள்ளி மாணவி பலாத்கார வழக்கு புதுச்சேரி தொழிலாளிக்கு ஆயுள்


ADDED : அக் 22, 2024 06:30 AM

Google News

ADDED : அக் 22, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு கடலுார் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், சங்கரன்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 42; கொத்தனார். இவருக்கு, கடலுார் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியுடன் கடந்த 2021ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

அதே ஆண்டு ஜூன் மாதம், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் வழக்கு தொடந்தனர். அரசு தரப்பில் ஜோதிரத்தினம் ஆஜரானார்.

வழக்கு விசாரணை நேற்று முடிந்தது. நீதிபதி லட்சுமி ரமேஷ், இவ்வழக்கில் தொடர்புடைய செல்வத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us